பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. விளையாட்டு வீரர்களுக்கு விதிமுறை விளக்கங்கள்

1. ஆட்டத்தில் நிகழும் சில் தவறுகள்

விதிகளைப் பின்பற்றியே தான் நாம் விளையாடுகிருேம். விளயாட்டின்போது ஏற்பட்டு விடுகிற போட்டியின் காரணமாக உற்சாகம் அதிகமாகின்றது என்ருல், உணர்ச்சி வசப்படுவதும் அளவுக்கு அதிகமாகப் போய்விடுகின்றதும் உண்டு. :

அவ்வாறு ஆடும்போது, பலர் விதிகளிலிருந்து விலகி ஆடுவதும் உண்டு. வேண்டுமென்றே சிலர், எவ்வாறேனும் வெற்றி பெற்று விடுவது என்று மனதில் உறுதிகொண்டு. விதிகளுக்குள்ளே வளைவை ஏற்படுத்திக் கொள்வதும் உண்டு. உள்ள உரிமைக்கு மேலே மாறுபட்டு ஆடுவதில் திறமையுள்ளவர்களாகத் தங்களே தந்திரசாலிகளாக வளர்த்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு. -

அத்தகைய தவருன முறைகள், வெற்றி எண்கள் பெறும் வழிவகையினை தடுத்து விடும். பெயரைக் கெடுத்து