41
தாயுமான அடிகளும் இதே மரபைப் பின்பற்றி அரும்பொன், மணி, என் அன்பு, என் அன்பான அறிவு, அறிவில் ஊறும் ஆனந்த வெள்ளம், வேதம், வேதாந்தம், மேதக்க கேள்வி, பூமிக்குள் வித்து, வித்தின் விளைவு: ண்ை, கருத்து, எண், எழுத்து, கதிக்கான மோணவடிவு என்று இறைவனுக்குப் பல்வேறு பெயரிட்டிருக்கிறார்.
இம் மரபைப் பின்பற்றியே நம் வள்ளலாரும், இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்களைச் சூட்டியிருக்கிறார். ஏன் அதற்கு மேற்பட்ட பெயர்களையும் அருட்பா ஒன்றில் தான் காணமுடியும். எடுத்துக்காட்டாகச் சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.
இறைவனது திருப்பெயர்கள்
1. அடை மொழிகளுடன் சில :- அவை * அம்பலத் தரன், ஆனந்தத் தேன், புலவரெல்லாம் புகழ்க் கண்ணியன், மலை தரு மயில், மடமயில், மதிமுக அமுது, உண்ணா ரமுது, சித்த சிகாமணி, குணப் பெருங் குன்று. ஞானதேசிக மாமணி, கண்ணளிக்கும் கண், களிப்பருளும் களிப்பு, மாற்ற றியாத செழும் பசும்பொன் என்பன.
2. உறவின் முறையில் சில :- அவை, ஐயன், அப்பன் அண்ணன், அத்தன், தந்தை தாய், காதலன் என்பன.
3. சுவைக்கும் பொருள்களாகச் சில :- அவை, கற்பகக் கனி, கற்கண்டு, அமுது, தேன் பால், சர்க்கரை, கரும்பு, பாகு, பழம், கனிரசம் முதலியன.
4. காணக் கூடியவையாகச் சில :- அவை, அரசு, அமைச்சு, இளம்பிறை மான், மயில், குயில், குன்று, மலை. கடல், மயிர், சுடர், கண், சோலை, தரு, விளக்கு, சோதி, குரு, அழகு, அக்கரை, இக்கரை முதலியன.