பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அறன் வலி உறுத்தல் என்பது அவர்தம் - இக்குறட்டாவில் அ மல் இல்லை. செல்வம் சிறப்பு வேண்டுமா? இப்பி இவை வேண்டுமா? பிறப்ே என்னென்ன எவ்ெ அறவொழுக்கம் ஒன் ..--> ~- Y☾ ஆக்கம் தருவது உயிர்க்கு வேறு என்ன இருக்க முடியும்? என்பது அவர் தருகின்ற முதல் தெளிவு. மக்களில் சிலர் அறமும் செய்யாமல் மறமும் செய்யாமல் சம்மா இருந்தால் ஒரு தொல்லையும் இல்லை என்று கருதுவர். அறம் செய்யாதவர்கள் சும்மா இருக்க முடியாது. யாரும் அறமோ மறமோ ஏதாவது ஒன்றில் ஈடபடவே நேரும். அறத்தைச் செய்யாமையால் மட்டும் தீங்கு வரும் என்பதில்லை. அறத்தை மறந்திருந்தாலே தீங்குதான் என்பது ஒருதலை 2ே. மறவாமல் செய்ய வேண்டும் என்றால் அறத்தை இயன்ற அளவிலாவது இடைவிடாமல் வாய்ப்புள்ள போதெல்லாம் செய்து வரவேண்டும் என்பது தானே பெறப்படும். ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் (33) என்பது வான் மறை வள்ளுவம் செய்தால் சரியாகச் செய்ய வேண்டும் இல்லை என்றால் சும்மா இருக்கவே வேண்டும் 1. எவரும் சும்மா இருக்க முடியாது என்பதற்குத் தாயுமான அடிகளின் 'கந்துக மதக் கரியை தேசோமயானந்தம் (1 -8) என்ற பாடலை நினைவுகூர்ந்து மகிழலாம்.