பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

සීෂී நன்றி மறவாமை ! ! స్త్ర குறிப்பிட்டிருப்பது ஈண்டு அறிதற்பாலது. இதனால்தான் வ: வேண்டுமானாலும் இதன் குறள் மணிகளைத் விருப்பப்படியெல்லாம் கையாண்டிருப்பதைக் கான -r دهند கின்றது. சிலவற்றை ஈண்டுக் காண்போம். செய்ந்நன்றியறிதல்: இப்பண்பு தமிழனின் என்று மதுரைத் தமிழ்நாகனார் என்ற சங்கப்புலவர் ஒ: { என்பதுதான் அது. இப்பண்பை வள்ளுவர் பெருமான் ஒரு தனி அதிகாரத்தில் பலவிதமாக விளக்குகின்றார். அனைத்திற்கும் சிகரமாகத் திகழ்வது. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110) என்ற குறள் மணியாகும். பெரிய அறங்களைச் சிதைத்த வர்க்கும் கழுவாய் உண்டு. ஆனால் ஒருவர் செய்த உபகாரத்தை மறந்தவர்க்குக் கழுவாய் இல்லை என்பது இதன் கருத்து. பெரிய அறங்களைச் சித்ைததற்கு ஆன் முலை அறுத்தல், மகளிர் கருவினைச் சித்ைததல், குரவர் தப்பிய கொடுமை முதலிய பாதகங்களைச் சான்றுகளாகக் காட்டுவார். கம்பராமாயணம்: இக்கருத்துடைய குறளைக் கம்பன் மிகச் சிறப்பாகத் தனது நூலில் கையாண்டுள்ளான். கார்காலம் கழித்து தனது வானரச் சேனையைக் கொண்டு சீதை இருக்கும் இடத்தைக் கண்டறிவதாகச் சொன்ன சுக்கிரீவன் தான் குறிப்பிட்ட காலத்தில் வரவில்லை. இராமன் சினங் கொள்ளுகின்றான். நிலையினை அறிந்து வருவதற்குத் தம்பி இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புகின்றான். சீறும் சினத்துடன் வரும் இலக்குவன் மகளிர் கூட்டத்துடன் வந்து சந்தித்த தாரையால் மனம் மாற்றம் அடைகின்றான்.