பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் I 1

பலன் இனிமேல் உங்களிடத்திலே நாங்களெல்லாம் கண்டு மகிழப் போவது.

முதலில் பேசவேண்டுவது வள்ளுவரைப்பற்றி அவரைப் பற்றிச் சொல்லவேண்டியது சில சொற்கள் தான,

வள்ளுவர் பலர். திரு சேர்ந்த வள்ளுவர் ஒருவர். குறள் பல; ஆனால், திரு சேர்ந்த குறள் ஒன்றுதான் உண்டு. திரு அடைமொழியாக ச் திருவள்ளுவர் சேர்ந்து தனிச்சிறப்பை யளிக்கின்ற பெயர்கள் தமிழ் நாட்டிலே பல உள. பல கோவை உண்டு நூல்களிலே. திரு சேர்ந்த கோவை ஒன்றே ஒன்றுதான். அது திருக்கோவை. பதிகள் பல வுண்டு தமிழ்நாட்டிலே; ஆனால் திரு சேர்ந்த பதி. திருப்பதி ஒன்றுதான் வாசகம் பல; ஆனால் திருசேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று அது திருவாசகம். வள்ளுவர் என்று சாதியாலும் பெயராலும் பலர் இருந்தார்கள். வள்ளுவர் என்றால் பலரைக் குறிக்கும். திரு சேர்ந்த அந்தப் பெயருக்கு உரியவர் ஒருவர்தான் திரு தனிச் சிறப்பு.அதைப் பெற்ற வள்ளுவர் திருவள்ளுவர்.

அவர் நமது நாட்டிலே கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகட்கு முன்பு பிறந்தவர். இன்று (15-2-53) கிறிஸ்து பிறந்து ஆயிரத்துத் தொளா வள்ளுவர் காலம் யிரத்து ஐம்பத்து மூன்று ஆண்டு ளாயின. அதற்கு முன்னே பிறந்தவர் வள்ளுவர். அவர் பிறந்து 1984 ஆண்டுகளாயின.

அவரைப் பற்றிய கதைகள் தமிழ் நாட்டிலே பல. அவையனைத்தும் அறிஞர்களாலே வெறுத்து ஒதுக்கப் கதைகள் பெற்றவைகள். திருவள்ளுவரைப்பற்றி தமிழ்நாட்டில் வழங்குகின்ற கதைகள் கணக்கற்றவை. மயிலாப் பூரில் பிறந்தார் என்பது ஒரு கதை; ஆதி என்ற புலைக்குடி மகளுக்கும் பகவன் என்ற