பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வள்ளுவரும் குறளும்

என்றேன். இப்போது அவர் குறளை வாங்கிப் படிக் கிறார்.

குறளில் இல்லாதது ஒன்றுமில்லை எல்லாம் இருக் கிறது. நீங்கள் எதுவேண்டுமோ, அதைத் திருக்குறளிலே பார்க்கலாம். ஆது ஒரு பெரிய குறள் கடல் செல்வம்! ஒரு கடல் முத்துக் குளிக்கிற ஒருவன் தன்னுடைய வலிமைக்குத் தகுந்த அளவிற்கு இவன் ஆழமாக மூழ்கி நிறைய முத்து களை அள்ளி அள்ளிக் கொண்டுவந்து குவிப்பது போல, நீங்களும் குறளில் முழுகி, செல்வங்களைப் பெற்றுப் பயன்படுத்தி, பிறருக்கும் அள்ளி அள்ளி வழங்கலாம்.

'திருக்குறளிலே இல்லாதது ஒன்றுமில்லையா?” என்று கேட்பார்கள். அந்தக் காலத்திலேயே நான் சிறு பிள்ளையாயிருந்து படுக்கும்பொழுது மாணவர்கள் ஒர் ஆசிரியர் திருக்குறளில் எல்லாம் . இருக்கிறது என்றார். துப்பாக்கி இருக் கிறதா? என்றான் ஒருவன்-ஓ இருக்கிறதே என்றார். (சிரிப்பு). - "எங்கே இருக்கிறது?’ என்றான். . "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி குறள் துப்பாக்கித் துப்பார்க்குத்

w துப்பாய தூஉம் மழை" என்பார். ஒ: ஐந்து, ஆறு துப்பாக்கி இருக்கிறதா? சரி தான்' என்பான். (சிரிப்பு). .

என்னுடன் ஒரு பையன் படித்துக்கொண்டிருந் தான். அவன் இந்த கிராப் செய்கிற குறளும் கிராப்பும் தற்குத் திருக்குறளில் ஏதாவது இருக் குங்களா? என்றான் - (சிரிப்பு) ஒ: இருக்கிறதே! -

“மழித்தலும் கீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்'