பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வள்ளுவர் இல்லம்

இரண்டாவதாக, - நம் உடலைவிட்டுப் பிரிக்கக் கூடிய மேற்கூறிய - இன்னும் ஏனைய உடைமைகளை விட, நம் உடலைவிட்டுப் பிரிக்கமுடியாத கை, கால், கண் முதலிய உறுப்புகளைக் காப்பதில், மேலும் மிகமிகப் பெரிய விழிப்பு செலுத்துகிறோம். (இவ்வுறுப்புகள் பிரிக்க முடியாதவையென்றால் வெட்டியெடுக்க முடியாதவை என்பது பொருளன்று ஆடையணிகலன்களைப் போல் உடம்போடு கூட்டவும், பின்பு பிரிக்கவும் - பின்பு கூட்டவும் முடியாதவை என்பதே பொருள்.) ஏனைய உடைமைகளை இழந்துவிட்டால், அரியவிலை தந்து - அரும்பாடுபட்டாவது திரும்பப் பெற்றாலும் பெறலாம். ஆனால் உடலுறுப்புகளை யிழந்து அவற்றைத் திரும்பப் பெறமுடியாதன்றோ? அதனாலேயே உறுப்புகளை ஏனைய உடைமைகளிலும் மிகுதியாகப் போற்றுகிறோம்.

முன்றாவதாக; - ஓர் ஊரில் எதிரி திடீரென்று படை யெடுத்துப் போர்புரியும்போது, மறவர்கள் (வீரர்கள்) தவிர மற்றையோர் ஊரைவிட்டு ஒடுகின்றனர். ஒடும்போது தம் உடைமைகளையெல்லாம் அறவேவிட்டு ஓடுகின்றனர். ஒடும் வழியில் ஒரு படைபட்டுக் கை வெட்டுண்டு விழுந்தாலும் அதைப் போட்டுவிட்டு ஓடுகின்றனர். கால் வெட்டுண்டாலும், முடிந்தவரை தரையில் ஊர்ந்து ஊர்ந்து ஒட முயல்கின்றனர். இங்ஙனம் தம் உடைமைகள், உடலுறுப்புகள் இவற்றையெல்லாம் மனமார விட்டுவிட்டு வெளியில் ஒடுகின்றார்களே! - எதைக் காப்பதற்காக இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஓடுகின்றார்கள்? தம் உயிரைக் காப்பதற்காக வன்றோ? உடைமைகள்