பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 117

விட்டால் - அரசாங்கம் அறிந்து விட்டால் என்ன நேருமோ என்று அஞ்சிக் கொண்டேயிருப்பார்கள் ஆதலின், இப்போதும் அவர்கட்கு மன அமைதி இராது ஆதலானும், பின்னர் வெளிப்பட்ட போது தண்டனையும் பழியும் ஏற்பார்கள் ஆதலானும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கமுடையவர்கள், கெட்டவர்கள் பேசுகின்ற கெட்ட பேச்சுக்களை மறந்தும் - தவறியும் தம் வாயால் பேசவே மாட்டார்கள். எனவே, கெட்டதைப் பேசா திருப்பதும் நல்லொழுக்கத்திற்கு ஒர் அடையாளமாகும் என்று ஆசிரியர் குறளில் கூறியுள்ளார்.

இனிக் குறள்களைக் காண்போம்.

‘அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.” ‘ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.’ ‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.’ ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.’ * ஒழுக்க முடையார்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.”

மேலும் ஒழுக்கம் என்னும் தலைப்பில் வள்ளுவர் கூறியுள்ள ஒரு புதிய கருத்து சிந்தனைக்குரியது: