பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வள்ளுவர் இல்லம்

உலகில் பலர் பழைய முறையை விடக்கூடாது என்று கூறிப் பழமையோடே முட்டிக் கொண்டு கிடப்பதைப் பார்க்கலாம். இவர்கள், கோயில்களில் பழைய வழக்கப் படியுள்ள எண்ணெய் விளக்கைத் தவிர மின்னொளி (எலெக்ட்ரிக்) விளக்குப் போடவே கூடாது என்றும், சிலரைத் தீண்டக் கூடாது என்றும், உள்ளே விடக் கூடாது என்றும் ஒற்றைக் காலில் நின்றார்கள் - நிற்கிறார் கள். இன்னும் சிலர் கடல் தாண்டிக் கப்பல் போக்குவரவு செய்யக் கூடாது என்றார்கள் - என்கிறார்கள். அதிலும் பெண்களை அழைத்துச் செல்லவே கூடாது என்பது அவர்களின் விடாப்பிடி. இவையெல்லாம் இன்று எவ்வளவு அறியாமைக்கு உரியன இவர்கள், வளர்ச்சி பெற்றுச் செல்லும் விஞ்ஞான உலகம் என்னும் குழந்தையை, மேலும் வளர விடாமல், பழையகாலப் பழக்கவழக்கம் என்னும் தாயின் கருவிற்குள் (வயிற்றுக்குள்) கொண்டு வைத்துவிட முயல்கின்றனர். இவர்கள் எவ்வளவு கற்றிருந்தாலும் அறிவிலிகளே யாவார்கள். அறிஞர் உலகம் இவர்களை மதிக்குமா? இவர்களின் கொள்கைகள் பொருத்தமற்றவை என்பதை கண்டு விளக்கி வீண்காலம் போக்க வேண்டியதில்லை. இக்காலத்திலுள்ள பத்து வயதுடைய பள்ளி மாணவரும் இவர்களின் பழைய கொள்கைகளைப் பழிப்பது வெளிப்படையன்றோ?

எனவேதான் நம் திருவள்ளுவர், மக்கள் தாம்

எவ்வளவு கற்று அறிந்திருந்தாலும், உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்னும் கருத்தில்,