பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 7

துவ்வாதவர் இறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார், தான் என்னும்) பலர்க்கும் பயன்படுத்தி வாழ வேண்டும் என்பதுதானே! இல் வாழ்வான் தன்னையும் (தன் குடும்பத்தையும்) காப்பாற்ற வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒருவன் தன் செல்வம் முழுவதையும் பிறர்க்கே செலவிட்டுத் தன் குடும்பத்தை அழித்துவிட வேண்டும் என்பதன்று; போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்றதல்லவா? எனவே, பிறர்க்கு ஒரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்துவிடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கு உதவிப் பலருடைய நன்மதிப்பையும் பெறுவதால், தப்பித் தவறித் தன் குடும்பத் திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டாலும் அப்பலரும் உதவுவர். பலருள் சிலர் கூடவா நன்றி பாராட்டமாட்டார்கள்? பிறர்க்கு உதவாதவனுடைய குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அதிலும் அவன் கெட்ட வழியில் பொருள் ஈட்டியிருந் திருப்பானேயானால் அவன் குடும்பத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள்.

மேலும், கெட்ட வழியில் மிக்க பொருள் திரட்டி வாழ்வது வெள்ளத்தை நம்பி வாழ்வது போலாகும். வெள்ளம் எப்போதும் வருமா? ஆனால், நல்ல வழியில் பொருள் ஈட்டி வாழ்வதோ, ஊற்று நீரை நம்பி வாழ்வது போலாகும். ஊற்று எப்பொழுதும் சுரக்குமன்றோ? எனவே

நல்வழிவில்வேன்டுரீம்இப் ஆல்ர்க்கும் LL