பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வள்ளுவர் இல்லம்

என்ன பயன்? காற்றை உண்டுதான் என்ன பயன்! கந்தலைக் கட்டி ஓட்டைச் சுமந்து இரந்து உண்டுதான் என்ன பயன்? ஒன்றும் இல்லை. எல்லாம் வெளிப்பகட்டே? ஆனால் பெண்ணுடன் வீட்டிலேயிருந்து சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், உள்ளத்தில் ஒழுங்கு உடையவர்கள் பேரின்பத்தையும் பெறுவார்கள். இதனை முற்றத் துறந்த முனிவரும் நுகர்ந்துகண்டவரும் (அநுபவ சாலியும்) ஆகிய பட்டினத்தாரே பகர்ந்துள்ளார்.

‘காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி

ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவர்

ஓங்குவிண்ணோர் நாடேய் இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் காரியர் பால் வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே” என்பது பட்டினத்தடிகளின் பாடல். (நாரியர் = பெண்டிர்) பெண்ணுடன் இருப்பவர்கள் வீட்டுலகப் பேரின்பத்தையும் பெறுவார்கள் எனில், இவ்வுலக இன்பங்கள் எல்லா வற்றையுங்கூட எய்த முடியும் என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லையன்றோ? இன்னும் இப்பாடலுக்கு, வீட்டுலகம் (மோட்சம்) சென்று பெறும் பேரின்பத்தை, இவ்வுலகிலேயே இல்லறத்தில் மனைவியுடன் இருந்து வாழ்ந்துகொண்டே பெற்றுவிடலாம் என்றும் பொருள் உரைத்துக்கொள்ளலாம். இந்தப் பாடலுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறே போதுமே!

எனவே, பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள்

கூறியுள்ள இந்தப் புரட்சியான கருத்து நன்றாய்த்தான் உள்ளது. வள்ளுவரே பின்வரப்போகும் குறளில் இந்தப்