பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 13

புரட்சியைக் கையாண்டுள்ளார். அந்தப் புரட்சியின் அனல் இங்கேயும் வீச, உரையாசிரியர்கள் இங்கேயே குளிர்காயத் தொடங்கிவிட்டனர். ஆயினும், இந்தப் பொருளுக்கு இந்த குறளமைப்பு இடந்தரவில்லை என்றே தெரிகிறது. அறத்தாறு என்று சொல்லிப் பின்னர்ப் புறத்தாறு என்றால், அறநெறிக்குப் புறம்பான மறநெறிதான். புறவாழ்க்கை என்று சொல்லியிருந்தால், இல்வாழ்க்கைக்குப் புறம்பான துறவு வாழ்க்கை எனப் பொருள் கொள்ளலாம். அவ்வாறு இல்லையாதலின், பழைய ஆசிரியர்களின் உரை பொருந்தாது என்பது இப்போது புரிகிறது.

இந்தக் குறளில் போஒய் என ஒரு சொல் உள்ளது. இதன் உண்மையான உருவம் போய்’ என்பதுதான். இதன் நடுவிலே ‘ஒ’ என ஒர் எழுத்துச் சேர்ந்துள்ளது. இந்த எழுத்திற்கு இங்கே தனி ஒலி இல்லை. ‘போ’ என்பதை நீட்டிச் சொல்லும்போதே ஒ’ என்பதற்கும் சேர்த்து நீட்டிவிட வேண்டும். போ - ஒய் எனப் பிரித்துப் படிக்காமல் போஒய் என ஒரே நீட்டாய் நீட்டிச் சொல்லிவிட வேண்டும். போ என்பதிலுள்ள (ப்+ஓ) ஒ என்னும் உயிரெழுத்தின் அளவை மிகுதியாக எடுத்து ஒலிப்பதற்கு அறிகுறியாக ‘ஒ’ என்பது சேர்க்கப்பட்டது; ஆதலின் இதனை இலக்கணத்தில் உயிர்அளபெடை’ என்பர். இங்கே இந்த உயிர் அளபெடை, இடம் அடைப் பதற்காகக் கையாளப்பட்டது, என்பது இலக்கண நூலாரின் கருத்து. இதனை ஒத்துக் கொள்ளமுடியாது. இடம் அடைப்பதற்கு வள்ளுவர்க்கு வேறுசொல் கிடைக்காதா? எனவே, ஒரு பொருள் கருதியே வள்ளுவர் இங்கனம்