பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வள்ளுவர் இல்லம்

எழுந்தருளியிருக்கக் கூடும் என்ற மக்களின் எண்ணத்தை எதிரொலிப்பவர்போல் வானுறையும் தெய்வம்’ என்றார் வள்ளுவர். அவன் வானத்துக்குச் சென்ற பிறகுதான் தெய்வமாவான் என்பதில்லை; வாழ்வாங்கு வாழுமவன் வையத்துள் இருக்கும் போதேகூட தெய்வமாக மதிக்கப் படுவான் என்ற குறிப்புப் பொருள் வையத்துள்...... வைக்கப்படும் என்பதிலிருந்து கிடைக்கின்றதல்லவா?

வாழ்வாங்கு வாழ்பவன் என்று கூறியுள்ளாரே-வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன? இல்லறத்தான் இப்படி யிப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இத்தனை குறள்களில் கூறிவந்தாரே - இன்னும் எத்தனையோ குறள் களில் கூறப்போகிறாரே, அப்படி யப்படி யெல்லாம் நடந்து கொள்வதுதான் வாழ்வாங்கு வாழ்தல்’ என்பது. இயற்கை நியதியின்படி இல்லறத்தில் வாழ்வதே வாழ்வாங்கு வாழ்தல் தானே! இல்வாழ்க்கையின் முற்ற முடிந்த தனிப் பெருஞ் சிறப்பு இந்தக் குறளில் கூறப்பெற்றுள்ளது.