பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வாழ்க்கைத் துணை நலம்

குடும்பப் பெண்ணுக்குரிய குணச் சிறப்புடன் கணவனது வருவாய்க் கேற்பச் செலவு செய்பவள் எவளோ அவளே நல்ல வாழ்க்கைக் துணைவியாவாள். வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு ஈண்டு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. என்ன! ஒருவனுக்கு மனைவிதான் வாழ்க்கைத் துணையா? அவன் தாய் தந்தையர் என்ன ஆவது அவன் உடன்பிறந்தார்கள் என்ன ஆவது? உற்றார் உறவின் முறையார், ஊரார், உலகத்தார் என்ன ஆவது இவர்கள் எல்லாரும் இருக்க, நேற்று வந்த பெண்டாட்டி வாழ்க்கைத் துணையாகி விடுவாளா? அவளுக்கு அவ்வளவு பெரிய பேரா? ஆம், அவளே வாழ்க்கைத் துணை. தாய் தந்தையரோ இறுதிவரை இருப்பதில்லை. இருக்கும்போதும் அவர்களது அன்பு பல பிள்ளைகளுக்கும் பங்கிடப்படுகிறது. உடன்பிறந்தார் களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவரவர் கட்கும் தனிக் குடும்பம் உண்டாகிவிட்டால், அதன் பிறகு அண்ணனாவது, தம்பியாவது! அண்டை வீட்டுக்காரனே மேல்! உற்றார்-உறவின்முறையார், ஊரார்-உலகத்தாரோ, வாழ்ந்தாலும் பொறுக்கமாட்டார்கள் - தாழ்ந்தாலும் மதிக்க மாட்டார்கள். நண்பரோ, சொந்த வேலையாய்ப் போய்க் கொண்டிருக்கும்போது ஏறிட்டுப் பார்க்க மாட்டேன் என்கிறார் - சில சமயம் தெரு வாயிற்படியோடு நிற்க