24 வள்ளுவர் இல்லம்
வைத்துப் பேசியே வழியனுப்பி விடுகிறார். பிள்ளை களுக்குள் பெண் பிள்ளைகளோ, அகப்பட்டவரையும் சுருட்டிக் கொண்டு அயலார் சொத்தாய்ப் போய்விடு கின்றனர். ஆண் பிள்ளைகளோ, திருமணம் செய்து வைத்துவிட்டால் அடியோடு மாறிவிடுகின்றனர். அவர் களுக்கு மனைவி என்ன-மாமனார் என்ன-மாமியார் என்ன -மைத்துனர்கள் என்ன-மைத்துணிகள் என்ன - இவர்களே நெஞ்சத்திரையில் நிழற்படம் போல ஒடிக்கொண்டிருக் கின்றனர். இப்படி ஒவ்வொன்றாகப் புடைத்துத் தூற்றிப் பார்த்தால், கடைசியாகத் தேறுவது மனைவி என்னும் ஒரு பொருள்தான். அவன் வாழ்வு அவள் வாழ்வு - அவன் தாழ்வு-அவள் தாழ்வு இன்ப துன்பம் இரண்டிலும் இறுதி வரையும் இணைந்து நிற்பவள் அவளே! எனவேதான், அவளை வாழ்க்கைத்துணை என்று வள்ளுவர் கூறுகிறார். மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை'’
இங்கே வள்ளுவர் அளவு மீறிப் புனைந்துரைத்து விட்டார்; ஒருவேளை அவர் மனைவியார் அவ்வாறு நடந் திருக்கலாமோ, என்னவோ? சில பெண்டிரால், அவர்தம் கணவரது வாழ்க்கை பெரிதும் இடர்ப்படுகின்றதே - வாழ்க்கைக்கே இறுதி நேர்ந்து விடுகின்றதே! அவர்தமை வாழ்க்கைத்துணை எனல் வள்ளுவர்க்கு அடுக்குமா? என ஐயுறலாம் சிலர். வள்ளுவர் என்ன அவ்வளவு தெரியா தவரா? அதனால்தான், எல்லா மனைவியரும் வாழ்க்கைத் துணைகளாகிவிட முடியாது; மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான் வளத்தக்காளே வாழ்க்கைத்