பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 33

தெரிவித்திருப்பதன் நோக்கம் என்னவென்பதை ஆராய வேண்டும்.

ஒழுங்காகக் குடும்பம் நடத்தும் பெண், முன்னிய காரியத்தை முட்டின்றி முடிப்பாள் என்பதே, இக்குறளில் குறிப்பாகக் கொள்ள வேண்டிய கருத்தாகும். இங்குத் திருவள்ளுவர் எடுத்துக்கொண்ட பொருளைச் சிறப்பிக்க வேண்டும் என்று கருதிக் கற்பனையையே கையாண் டுள்ளார். இது ஒரு வகையான கவிமரபு. இன்னோரன்ன கவிமரபுகளைக் குற்றம் உடையதாகத் தள்ள முடியாது.

வள்ளுவர் ஓரிடத்தில், துன்பத்திற்குக் கலங்காதவர்

துன்பத்திற்கே துன்பம் கொடுப்பர் என்னும் கருத்திலும், துன்பம் துன்பப்படும் என்னும் கருத்திலும்,

‘இடும்பைக்கு இடும்பை படுப்பர்’

‘இடுக்கண் இடுக்கண் படும்’ என்று கூறியுள்ளார். உண்மையில் துன்பம் ஒர் உயிருள்ள பொருளா? அத்துன்பத்திற்கு ஒருவர் துன்பம் கொடுப்பது என்பதும், அத்துன்பம் துன்பப்படும் என்பதும் முயற் கொம்பும், குதிரைக் கொம்பும் அல்லவா? இதன் உண்மைக் கருத்து என்ன? துன்பத்திற்காக மனம்சோராமல் இருந்தால் அத்துன்பம் துன்பமாகத் தோன்றி வருத்தாது நீங்கும் என்பதே,

மற்றோரிடத்தில், பிறந்த குடிக்குப் பெருமை தருவேன் என்று முயலும் ஒருவனுக்குக் கூடத் தெய்வமும் தன் இடுப்பு உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்து உதவி செய்யும் என்னும் கருத்தில், ‘குடி செய்வல் என்னும்