பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வள்ளுவர் இல்லம்

களை நோக்கி உலகினர் எள்ளி நகையாடுவர். ஆதலின்

பெண் கணவனுக்குப் பெருமையளிக்க வேண்டும்.

வீட்டிற்கு விளக்கம் பெண்கள்; பெண்கட்கு விளக்கம்

நல்ல பிள்ளைகள். இங்கு, “மனைக்கு விளக்கம் மடவார்,

மடவார் தமக்குத் தகைசால் புதல்வர், என்னும் நான்மணிக்

கடிகைச்செய்யுள் ஒப்பு நோக்குதற்குரியது.

“புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை’

‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு'