பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவர் இல்லம்

பூணுல் பூண்டவர்கள் (இரு பிறப்பாளர்) தென் புலத்தார் கடனைக் கழிப்பதற்காகப் பிள்ளை பெற்றே தீரவேண்டும் என்று பதமாகப் பகர்ந்துள்ளார் பரி மேலழகனார். அப்படியானால் மற்றவர்பிள்ளை பெற வேண்டியதில்லை போலும்! நாம் தென்புலத்தார் கடனைக் கழிக்கவேண்டும்; மோட்ச்த்திற்குச் செல்லவேண்டும் என்ற கருத்தைத்தான் காதலர் கண்கள் ஒன்றுக் கொன்று அறிவித்துக் கொள்கின்றன போலும்! ஆண் - பெண்களின் கூட்டுறவின்போது அந்நோக்கந்தான் முதலிடம் பெறுகின்றதுபோலும்! விசுவாமித்திர முனிவர் முதல் வீரப்பன் வரையும் - அகலிகை முதல் ஆண்டிச்சி வரையும் சிற்றின்பத்தில் ஈடுபட்டதற்குரிய காரணம் என்ன வென்பது எவர்க்கும் தெரியாது போலும்

இன்ப உலகின் இயல்புகளை எடுத்தோதி, அவற்றுள் சீர்திருத்தம் காண்பிப்பதே, பண்டைய செந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பியல்பாகும். இத்தகையதே திருக்குறளின் மக்கட் பேறும். வாழ்க்கையில் எவ்வளவு இன்பம் இருப்பினும் குழந்தையில்லாவிட்டால் என்ன பயன்? தமக்குப்பின் குடும்பத்தின் நிலை என்ன? கொழு கொம் பில்லாத கொடிபோல் குன்றுமே வளர்ச்சி! உலகில் எப் பொருள் தோன்றினாலும் பிள்ளைப் பேறு இல்லாவிடின் உலகந்தான் நடைபெறுவது யாங்ஙனம்?

எனவே துறவு, கைம்மை என்னும் திரை மறைவில் ஒளிந்து வாழ்ந்து கருவைச் சிதைப்போர் சிலரும், மணந்து கொண்டும் பிள்ளை பெறாதவர் சிலரும், பிள்ளை பெற்றும் தம்முடைய ஒழுக்கக் குறைவாலும், வளர்த்து முன்னுக்குக்