பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெட்டவழியில் பொருள் தேடாவிட்டால் பலர்க்கும் பகுத்துக்கொடுக்கும் அளவு பொருள் சேர்வது எப்படி? நல்ல வழியில் பொருள் தேடும் நல்லோர் சிலர், தம்மையே நன்கு பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார்களே! அவர்கள் பலர்க்கும் பகுத்துக்கொடுப்பது எப்படி? செல்வம் சேர்ந்திருந்தாலும், பலர்க்கும் பகுத்துக்கொடுத்துக் கொண்டேயிருந்தால் அக்குடும்பம் விரைவில் நொடித்துவிடாதா? பின்பு இடையறாமல் எப்போதும் விளங்குவது எப்படி? என்பவற்றையெல்லாம் எண்ணும்போது இக்குறளில் நம்பிக்கை தோன்றாது தானே! இதனைச் சிறிது ஆராய்வோம். திருவள்ளுவர் இந்தக் குறளில் தெரிவித்திருப்பது என்ன? நல்ல வழியில் பொருள் ஈட்டவேண்டும்; அப்பொருளை, (பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை, துறந்தார், துவ்வாதவர், இறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார், தான் என்னும்) பலர்க்கும் பயன்படுத்தி வாழவேண்டும் என்பதுதானே இல்வாழ்வான் தன்னையும், தன் பெற்றோர், மனைவி, மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒருவன் தன் செல்வம் முழுவதையும் பிறர்க்கே செலவிட்டுத் தன் குடும்பத்தை அழித்துவிட வேண்டும் என்பதன்று. போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்றதல்லவா? எனவே, பிறர்க்கு ஒரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்துவிடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கும் உதவிப் பலருடைய நன்மதிப்பையும் பெறுவதால், தப்பித்தவறித் தன் குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அப்பலரும் உதவுவர். பலருள் சிலர்கூடவாநன்றி பாராட்டமாட்டார்கள்? பிறர்க்கு உதவாதவண்டைய குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அதிலும் அவன் கெட்டவழியில் பொருள் ஈட்டியிருப்பானேயானால் அவன் குடும்பத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள். மேலும், கெட்ட வழியில் மிக்க பொருள் திரட்டி வாழ்வது வெள்ளத்தை நம்பி வாழ்வது போலாகும். வெள்ளம் எப்போதும் 16 பேரா. சுந்தர சண்முகனார்