பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தெளிவுரை) உலகில் எது எதுவோ அறம் என்று சொல்லப்படினும் உண்மையில் அறம் என்று சொல்லப்படுதற்கு உரியது இல்வாழ்க்கைதான். இல்வாழ்க்கையே சிறந்தது எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்டதால், குடும்பத்தில் இருந்துகொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கொள்ளலாகாது. அந்த இல்வாழ்க்கையும் பிறனொருவன் பழிக்காதபடி இருந்தாலே சிறந்ததாம். (ஆராய்ச்சி உரை)"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்பதற்கு வாடிக்கையாக ஏதேதோ பொருள் சொல்வது வழக்கம். இல்லறம், துறவறம் என அறம் இருவகை; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்னுங் கருத்தில் பரிமேலழகர் எழுதியுள்ளார். இன்னும் எத்துணையோ அறங்கள் (முப்பத்திரண்டு அறங்கள்) சொல்லப் படுவதுண்டு. அவற்றுள் இல்லறமே சிறந்தது என்றெல்லாம் சொல்லுவதுண்டு. இங்கே நான் என்ன சொல்லுகிறேன்? அறமே இல்வாழ்க்கை- இல்வாழ்க்கையே அறம் கரும்பேகன்னல்-கன்னலே கரும்பு என்பது போல. அகராதி தொகுப்பவர்கள், அறம் என்பதற்கு நேரே இல்வாழ்க்கை எனவும், இல்வாழ்க்கை என்பதற்கு நேரே அறம் எனவுங்கூட எழுதிவைக்கலாம். இதற்கு நிகண்டு போன்றதொரு சான்று, 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்பதே. ?? - ?? 締 "அறன் எனப்பட்டதே" என்பதின் இறுதியிலுள்ள "ஏ துறவறத்தினின்று இல்லறத்தைப் பிரித்துக் காட்டும் பிரிநிலை ஏகாரம் ஆகும் எனப் பொருள் கொண்டு, "அஃது" என்ற சொல்லுக்கு "அந்தத் துறவறமும்" எனப் பொருள் கூறியுள்ளார் பரிமேலழகர் ஏகாரத்தைத் தேற்ற ஏகாரமாகக் கொள்ளின் இந்தக் குழப்பத்துக்கு இடமில்லை. "அஃது" என்னும் சுட்டு எவ்வாறு துறவறத்தைக் குறிக்க முடியும்? முதலில் இல்வாழ்க்கையைக் கூறி, பின்பு அது என்று சுட்டிக்காட்டினால் எது என்று எண்ணுக. இல்வாழ்க்கையில் இருந்துகொண்டுதான் எல்லா அறமும் செய்ய முடியுமாதலின் "அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை" என்றார். இல்வாழ்க்கையே அறம் எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்டதால், 30 பேரா. சுந்தர சண்முகனார்