பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுங்கான முறையில் நல்வாழ்வு நடத்திப் பின்னர் இறந்து போனவரைக் குறித்துச் சுட்டி, "அவர் செத்துத் தெய்வமாகப் போய் விட்டார்" என்று மக்கள் பேசிக் கொள்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்றுதான்நம்புகிறேன். நாமே பலரைப் பற்றி அவ்வாறு சொல்லியிருப்போம். ஆனால், தீயசெயல்கள் செய்து இறந்துபோன கொடியவர்களை அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வது வழக்கத்திலில்லை; அவர்களை அலகையாய் அலைவதாகச் சொல்வதுதான் வழக்கம். ஆனால், நல்வாழ்வு வாழ்ந்து இறந்துபோன நல்லவரைக் குறிப்பிட்டுத்தான், "சும்மா சொல்லக்கூடாது. அவர் செத்துத் தெய்வமாய்ப் போய்விட்டாரு அவர் எவ்வளவு பாடுபட்ட மனுழ்சன் தெரியுமா அவர் மட்டும் இப்பொழுது இருந்திருந்தால் இது இப்படியா நடந்திருக்கும்? இந்நேரம் எவ்வளவோ மேல் நோக்கத்துக்குக் கொண்டு வந்திருப்பாரு" என்றெல்லாம் சொல்வது உலகியல். மக்களது பேச்சுவழக்கை இங்கே எழுத்துக்கு எழுத்து அப்படியே கொடுத்திருக்கிறேன். உண்மைதானே இது? இதே கருத்தைத்தான், "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்றார் திருவள்ளுவனார். எனவே, தெய்வநிலை யடைவதற்குரிய நேர்ப்பாதை வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் போலும் தெய்வங்கள் எல்லாம் இப்படிமேல் வகுப்பு மாறிவந்தவைதாமோ?நம் திருக்கோவில்களுக்குள் நுழைவோமேயாயின், தெய்வங்களின் பட்டாளங்களைப் பரவலாகப் பார்க்கலாம். அவற்றையும் கூர்ந்து நோக்கின், ஆழ்வார்களாக-அல்லது நாயன்மார்களாக இருக்கக் காணலாம். அண்மைக் காலத்தில் மனிதர்களாக இருந்து பின் தெய்வமாக மாறிய இவை எல்லாம், "ஜூனியர்" தெய்வங்கள் (பிந்தியவை) ஆகும். அவதார புருழ்சர்களாக வந்து தோன்றிய தெய்வங்கள் எல்லாம் "சீனியர்" தெய்வங்கள் முந்தியவை) ஆகும். இவையன்றி, இன்னும் இக்குறளின் உண்மைக்கு ஒரு சான்று 32 பேரா. சுந்தர சண்முகனார்