பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்சிமையுடன் விளங்கினால், இல்லது என் = வீட்டில் இல்லாத பொருள் என்ன? இல்லவள் மாணாக்கடை = மனைவி மாண்பின்றி யிருந்தால், உள்ளது என் = வீட்டில் இருக்கக்கூடிய பொருள் யாது? ஒன்றும் இராது. இல்லவள் = மனைவி; மாண்பு=நற்குணநற்செய்கை தகுதி திறமை முதலியன உடைத்தா யிருத்தல். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன. உரை) ஒருவனுக்கு மனையாள் மாட்சிமை யுடையாளானால், எல்லா மிலனே யாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது? (பரி. உரை) ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையளாயினக்கால் இல்லாததியாது அவள் அன்னளல்லாக்கால் உள்ளது. யாது? (தெளிவுரை) மனைவிக்கு மாண்பு இருந்தால், குடும்பத்தில், இல்லாதது என்ன? எல்லாம் இருக்கும். மனைவிக்கு மாண்பு இல்லையானால், குடும்பத்தில் உள்ளது என்ன? ஒன்றும் இருக்காது. (ஆராய்ச்சி உரை) இந்தக் குறள், குடும்ப அறிவியலின் (Home Science) எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டது - இல்லை, எல்லைக்கோட்டையும் தாண்டிவிட்டது. இதற்குமேல் இன்னும் எந்தெந்தச் சொற்களால் குடும்பக் கலையின் உயர்நிலையை உரைத்துக் காட்டமுடியும்? வீட்டில் ஒன்றும் இல்லாவிடினும் மனைவிக்கு மாண்பு மட்டும் இருந்துவிட்டால், மனைக்கு வேண்டிய மற்ற எல்லாம் இருப்பதாகவே பொருளாம். வீட்டில் எல்லாமே இருந்தாலும் மனைவிக்கு மாண்பில்லையாயின் ஒன்றும் இல்லாததாகவே பொருளாம். இதனை இல்லது என்? உள்ளது என்? என்னும் வினாக்களால் விளங்க வைத்துள்ளார் ஆசிரியர். இங்கே வள்ளுவர், திட்டவட்டமாகத் வள்ளுவர் கண்ட மனையறம் 4 3