53
53
அன்ன நீரார்க்கே - அப்படிப்பட்ட தன்மையுடைய வர்களுக்கே, உள - உண்டாகும். சுற்றத்தார்களைப் போற்றி அவர்களுடன் கலந்து உண்டு வாழ்பவர்களுக்கே செல்வாக்கு அதிகமாகும். மாணவர்கள் : எழுதிக்கொண்டோம் ஐயா! ஆசிரியர் : மறுபடியும் சொல்லுகிறேன்; எழுதியதைப் பார்த்துக் கொள்ளுங்கள். (ஆசிரியர் உரை சொல்லுகிறார்; மாணவர்கள் எழுதியதைக் கவனமாகப் பார்க்கின்றனர்.) சுந்தரம் : (ஆசிரியரைப் பார்த்து) காகங்கள் கிடைத்த உணவை மறைக்காமல் தம்முடைய இனத்தை ஏன் கூவி அழைக்கின்றன? - மணி : மறைத்துவைத்து உண்ணத்தெரியாது போலிருக்கு! ஆசிரியர் : கேள்வியும் பதிலும் நன்றாக இருக்கின்றதே! உங்கள் உற்சாகத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்; அவை கூவி அழைப்பதற்குக் காரணம், அவற்றின் நல்ல குணம்தான். நாமும் அந்தக் குணத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும்; இப்போது நான் கேள்வி கேட் கின்றேன், விடை சொல்லுங்கள்! " கரவா’ என்பதற்கு என்ன பொருள்? மணி : மறைக்காமல்’ என்பது ஐயா. ஆசிரியர் : சரி கரைந்து என்பதற்குப் பொருள் என்ன? வேலு! நீ சொல்? வேலன் : கரைந்து' என்றால், கூவி அழைப்பது என்ப தாகும். அதாவது தனது இனத்தைக் கூவி அழைப்ப தற்குக் கரைந்து’ என்று கூறினார்.