பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் , 99 6 கவியரசர் முடியரசன் எத்துயரம் வந்தாலும் ஏற்று மனத்தகத்தில் அத்தனையுந் தாங்கும் அளப்பரிய வல்லமையும், உள்ளம் அலைந்துமிக ஒடிக் கலங்காமல் தெள்ளத் தெளியவைத்துச் சீர்செய்யும் சிந்தனையும், இன்றொன்று நாளையொன் றேற்ற வகைதெரிந் தொன்றொன்றாச் சொல்லி உயர்த்திவரும் அப்பள்ளி: தானென்ற தற்செருக்கைத் தள்ளித் தனக்காகத் தானென்ற பேராசை தன்னைத் தகர்த்தெறித் தெல்லாரும் ஒன்றென்றே எண்ணுகிற ஒப்புரவைச் சொல்லாமற் சொல்லிச் சுடரேற்றும் நற்பள்ளி: பள்ளியெனும் இல்வாழ்வில் பங்குடையோர் இவ்வனைத்தும் உள்ளமுறக் கற்பதைத்தான் ஒதிவைத்தார் கற்பென்று; பாரில் அதைமாற்றிப் பாவையர்க்கு மட்டுமென்று கறிப் பிரித்துரைத்தார் கொண்டவனுந் தப்பிவிட்டான், விடில்லை பொன்னில்லை வேண்டும் பொருளில்லை தோடில்லை மற்றுந் துணியில்லை என்றாலும் நீங்காத பேரன்பு நெஞ்சில் நிறைந்திருந்தால் தாங்காத பேரின்பந் தானேவந் தெய்திவிடும்; * ஒன்றன்க றாடை உடுப்பவரே யானாலும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை எனவுரைத்த மூத்தோர் மொழிப்பொருளை முன்னிறுத்தி நாம்வாழின் பூத்துக் குலுங்கும் பொலிவு. இலக்கியப் பேரவை,ஈரோடு. 23.12.1967.

  • 'ஒன்றன் கூறாடை... வாழ்க்கை' - கலித்தொகை