பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் உலகில்...

                     6. நண்பர்கள்

பொய்யாத மொழியான்றன் உலகில் நண்பர் புடைசூழ நான்வந்தேன்; அவர்தம் கேண்மை

  • எய்யாமல் வளர்மதிபோல் வளரக் கண்டேன்

எனதுதமிழ் நூல்நயம்போல் இனிக்கக் கண்டேன்; மெய்யாக அகம்ருகவே பழகி நிற்பார்; மேலொருகால் இடுக்கண்வரின் உடுக்கை காக்கும் கையாக வந்துதவிக் காத்து நிற்பார்: கள்ளமிலா உணர்ச்சியினால் கிழமை கொள்வார்.

குடிபிறந்த ஒழுக்கத்தார், பழியை அஞ்சும் கொள்கையினார், மனத்துக்கண் மாசு தீர்ந்தார்; இடித்துரைத்துத் திருத்திவரும் இயல்பு கொண்டார்; என்றேனும் நோதக்க செய்து விட்டால் வெடித்ழுெந்து சினங்கொள்ளார்; உரிமை தன்னால் விளைவறியாப் பேதமையால் நிகழ்ந்த தென்று துடைத்தெறியும் நண்பரவர்; அவர்தம் நட்பால் தோளெல்லாம் பூரித்து நிமிர்ந்து நின்றேன் G

  • எய்யாமல் - இளைக்காமல் அஃதாவது குறையாமல்