பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

24

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 24 கவியரசர் முடியரசன்

வெற்றிவேற் கையுடையேன், வீரமிக்க என்தோளில் சிந்தா மணிமாலை சேர்த்து மகிழ்விக்க முந்தி எழில்குலுங்க முன்னிற்பாள் வெற்றிமகள்; என்றன் தனிப்பாடல் எல்லாங் குடிமக்கள் என்றுங் குறையின்றி ஏற்றமுற வைத்திருப்பேன் சாதி மதங்களைநான் சாடி வெறுத்தாலும் ஒதுமதம் ஏழும் உலவிவரும் என்னாட்டில், செப்பம் திரண்டுவரச் செங்கோல் செலுத்துதற்கு முப்பத் திரண்டாக முன்னோர்சொல் உத்திகளால் குற்றங்கள் பத்துங் குலவாமல் நீக்கிவிட்டு மற்றழகு பத்தும் மருவிவர நான்புரப்பேன்; கறிவரும் மக்கள் குறைநீக்க நல்வளம ை ஊறிவரச் செங்கோல் உயர்த்திப் பிடித்திருப்பேன்; முப்பால் முகிலாகி மும்மாரி திங்கள்தொறும் தப்பாமல் பெய்வதனால் தண்ணி நிறைந்திருக்கும்; நெஞ்சம் எனும்வயலில் நேர்மைக் கலங்கொண்டு, துஞ்சலிலா நல்லெருது தோளில் நுகம்பூட்டி, ஆழ உழுதுழுது, அன்பென்னும் நீர் பாய்ச்சிச் சூழறிவை வித்தாக்கித் தொன்மை உரமிட்டு, நல்லறமாம் நாற்றின் நடுநடுவே தானாகப் புல்லி வளர்கின்ற பொய்மைக் களைகட்டு, நூலினர் வாய்மொழிந்த நுண்ணிய கேள்விஎனும் வேலி அமைத்தங்கு வேளைதொறும் ஏகி, அழுக்கா றவாமுதலாம் ஆவொடுமா பற்றி இழுக்காமல் தின்னாமல் எப்பொழுதுங் காத்திடலால்