பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

40

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் , 40 ைகவியரசர் முடியரசன் இவ்வுலகில் பிறக்கின்றோம், பிறந்த பின்னர் இறக்கின்றோம், இறவாமல் இருந்த தில்லை; இவ்விரண்டு செயலுக்கும் இடையில் தான்நாம் இருக்கின்றோம், இடைவெளியில் நாமியற்றும் வெவ்வினைகள் எவ்வளவோ? அட்டா அந்த விளையாட்டின் திறமெல்லாம் விளம்ப எண்ணின் அவ்வளவும் சொல்வதற்கு வள்ளு வற்கும் அடங்காது போய்நிற்கும் அவனும் தோற்பான். உலகியலின் கூறெல்லாம் ஆய்ந்து ணர்ந்தோன், ஒப்பற்ற பேரறிஞன், முப்பால் சொல்லி இலகுபுகழ் கொண்டொளிரும் ஆசான் வாழ்வை இன்பமென எடுத்துரைத்தான்; அதனை விட்டு விலகுநெறி தனிற்புகுந்தோம் மாயம் என்ற வெற்றுரையை நம்புகின்றோம் அதனால் வாழ்வை பலதுயரம் நிறைந்ததொரு கூடம் என்றே பாழ்நெஞ்சில் நினைந்துவிட்டோம்தாழ்வே கொண்டோம். ஆற்றுக்குக் கரையிரண்டு வேண்டு மன்றோ? அதுபோல வாழ்வுக்கும் கரைகள் வேண்டும், ஏற்றமிகும் ஒரு கரைதான் இன்பம் ஆகும் - இணையான மறுகரைதான் துன்பம் ஆகும்; காற்றுக்குள் இரண்டுண்டு; தென்றல் ஒன்று கடுகிவரும் வாடைஒன்று, வாடை கண்டு காற்றைத்தான் வெறுப்பதுண்டோ! வாழ்வில் துன்பம் கலந்துவரும் நிலைகண்டு வெறுத்தல் நன்றோ?