பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

42

 கவியரசர் முடியரசன்


             திருக்குறள் நம் மறை

நமக்கென ஒருமறை யுண்டு. அதை நம்பி நடந்திடு நன்னெறி கண்டு

                                   - நமக்கென 

அமைப்பால் உயர்ந்திடும் அருட்பால் மருந்து விருப்பால் அருந்தி இருப்பாய் திருந்தி

                                - நமக்கென 

உடலில் படிந்திடும் அழுக்கினைத் துடைத்தனை உளத்தில் மாசுகள் அடைந்திட விடுத்தனை! மடமை அகன்றிட மாந்தனென் றுயர்ந்திட வாழ்வினைத் துலக்கிடத் தாழ்வினை விலக்கிட

                               - நமக்கென 

எதையெதை யோமறை என்று.நீ போற்றினை என்பயன் கண்டனை இழிநிலை கொண்டனை! கதைகளை நம்பினால் காண்பயன் ஒன்றிலை கருத்தினை வளர்த்திடும் திருக்குறள் படித்திடு

                                - நமக்கென 

ஆயிரம் திருவிளையாடல்கள் பாடினை அம்மஓ! நீயும் ஆடல்கள் ஆடினை! காயினைக் கவர்ந்தனை கனியினை மறந்தனை கருத்தினில் ஒருகுறள் நிறுத்திடின் உயர்ந்தனை

                               - நமக்கென
                                               2.7.1987