பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

50

 கவியரசர் முடியரசன்


சுவையோ சுவை! பாரைத் திருத்திப் பயன்படுத்தப் பண்படுத்தி ஏரைப் பிடித்தோன் எழில்கொழிக்கக் கண்டிருந்தான்; மண்ணில் தனதுழைப்பால் மாநிலத்துத் தாய்தந்த உண்ணும் பொருளெடுத்தே ஒவ்வொன்றுந் தான்சுவைத்தான்; கார்ப்பும் புளிப்புங் கசப்புந் துவர்ப்புடனே யார்க்கும் பிடிக்கும் இனிப்போ டுவர்ப்பென்று சொல்லும் அருமைச் சுவையெல்லாம் அப்பொருளில் மல்குதலைக் கண்டவற்றை வாயாற் சுவைத்துணர்ந்தான் நெஞ்சங் களித்தான் நினைந்து நினைந்தொருநாள் விஞ்சுஞ் சுவையை விரித்துரைத்தான் ஆறென்று; நாச்சுவையை ஆறாக நாட்டுக் குரைத்தவனே பாச்சுவையுங் கண்டு பகர்ந்தான் வகைசெய்து, வாயுணவே நோக்காக வாழ்ந்தோன் அவனல்லன் தோயுஞ் செவியுணவுஞ் சொன்னான், அதன்மேலும் தோற்றுசுவை எட்டென்றுஞ் சொன்னான் அவன்பெற்ற ஆற்றலினைக் காணின் அடடாஒ என்று மருட்கைச் சுவைதோன்றும்; மாநிலத்தில் முன்னோர் பெருக்கும் புகழறியப் பேரார்வத் தோன்றிவரும்; ஒதும் இலக்கியத்தை ஒதிச் சுவையமைத்துத் திதின்றிச் செந்தமிழைக் காத்த திறத்தினையும் தத்தமிழை ஒம்பும் அரும்புலவர் வாழ்ந்ததையும்