பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

54

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 54 இ கவியரசர் முடியரசன் கு சாதியினால் சமயத்தாற் பிளவு பட்டுத் தடுமாறித் தாழ்வுற்று மக்கள் தம்முள் மோதுண்டு போகாமல் தடுத்துக் காத்தான் முன்பில்லாத் தீப்பழக்கம் வேண்டா என்றான்; ஒதுகின்ற சீர்திருத்தப் பெரியாராக ஒப்பில்லா! நம்பெரியோன் காட்சி தந்தான்; ஏதமிலாப் புலமைபெறும் ஆசான் காட்டும் இனியவழி நாட்டுக்கு நலமே கட்டும். கடவுளெனும் ஒருபொருட்டுக் கட்டி விட்ட கதைகளுக்கோர் அளவுண்டோ?அவற்றால் மாந்தர் மடமைஎனும் பேரிருளில் வீழ்ந்து மூழ்கி வழிவகைகள் காணாமல் ஏங்கித் தாழ்ந்தார்; கடல்பொருவும் வாலறிவன் சிந்தித்தாய்ந்து கடவுளெனும் செம்பொருட்தி வகுத்து ரைத்த திடமுடைய குறிக்கோளைப் பூண்டு நிற்பின் தீயநெறி எவ்வண்ணந் தலையெடுக்கும்? நல்லரசை நாட்டுதற்கு வழிகள் சொல்லும் நாவலர்க்குத் தலைவனவன், எங்கள் அண்ணல் சொல்லுகின்ற அரசியலின் நெறியிற் சென்றால் துயரேது? கொடுங்கோலர் பிழைப்பும் ஏது? சொல்லரசன் குறிக்கோள்கள் சட்டம் ஆனால்

  • தொழும்புசெயும் நிலையேது? வறுமை ஏது? நல்லறிஞன் குறளுருவன் தொண்டை நாடன்

நாகரிக அரசியலின் தந்தை யாவன்.

  • தொழும்பு - அடிமை