பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

61

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 61 ல கவியரசர் முடியரசன் அசைவில்லா மனவூக்க முடையான் றன்பால் ஆக்கமெலாம் வழிவினவிச் சென்று சேரும்; திசையெல்லா மவன்புகழே பரவி நிற்கும்; தீதுறுங்கால் மனமுடைந்தாற் பயனே யில்லை; வசையில்லா மனவெழுச்சி கொண்டு ழைத்தால் வாழ்விலுயர் நிலைகாண்பர்; ஆனால் நாமோ இசைவில்லா ஒருதுயரங் காண நேரின் o இடிந்து மனமுடைந்தயர்ந்து சோர்ந்து நிற்போம். தெய்வத்தாற் பயன்குன்றி நின்ற தேனும் தேகத்தாலுழைப்போர்க்குப் பயனுண் டென்றே உய்யத்தான் வழியுரைக்குங் குறளைக் கண்டோம்; ஒதுகின்றோம் ஆனாலும் முயன்று நின்று செய்யத்தான் மனமுண்டா? சோம்பல் கொண்டு - செயலின்றி விதியென்று பழியைப் போட்டுப் பொய்யைத்தான் மொழிகின்றோம் கடமை செய்யோம் ' புழுவினுக்கு மெதிர்நில்லாச் சிறுமை கொண்டோம். உரந்தோயு முடலழகன் கண்காலாய உறுப்பழகன் ஆயினுநற் பண்பில் லானேல் அரம்போலுங் கரறிவிற் பெரிய னேனும் அவன்மாந்தன் எனவுரையாதுலகம், நல்ல மரம்போலுந் தோற்றத்த னெனப்ப Nக்கும்; மனிதரென அறிவுடையோர் நமைம திக்கத் திறம்பாத பண்புருமக் குடைமை என்று செம்மாந்து நிற்பதற்கும் உரிமை யுண்டோ?