பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

62

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 62 e கவியரசர் முடியரசன் அல்லவற்றைச் செய்வதற்கு நாணங் கொள்வர் அறிவுடைய குலமக்கள் என்ற றிந்தும் நல்லவற்றைச் செய்வதற்கே நாணு கின்றோம் நானுக்கும் நமக்கும்வெகு துர மன்றோ? சொல்வதற்கும் நாணுகிறேன் பழிகள் செய்யத் தொட்டறியாத் துறையுண்டா? ஒன்று மில்லை செல்லவிட்ட நாணமது நம்மைக் காணின் சிரித்தொதுங்கித் தலைகுனிந்து நாணிச் செல்லும். குறள்பிறந்த திருநாட்டிற் பிறந்த மாந்தர் குறையுடைய வாழ்வினராய் வாழ்ந்தா ரேனும் அருள்நிறைந்த மனத்தினராய்க் குறள்நூல் காட்டும் அருநெறியில் வழுவின்றி ஒழுகும் சான்றோர் ஒருசிலர்தாம் ஆங்காங்கே வாழ்த லாலே உலகமினு மழியாமல் நிற்கக் கண்டோம் தெருளறிவு தருநூலை ஓதி ஒதித் தெளிந்தொழுக முயன்றிடுவோம் வாரீர்! வாரீர்! வள்ளுவர்சொல் லுடைமையெலா மவ்வ வர்க்கு வாழ்வளிக்குந் தனியுடைமை யாகுங் கண்டீர்! வெள்ளமெனச் சேர்ந்துறையும் மன்பதைக்கு விழவுதரும் பொதுவுடைமை யாகுங் கண்டீர் உள்ளமது குழைந்தும்மை வேண்டு கின்றேன் ஒப்பரிய குறள்நெறியை உடைமை யாக்கி அள்ளுதமிழ்ப் பாமொழியை நெஞ்சிற்றேக்கி அளப்பரிய இன்பத்தில் திளைப்போம் வாரீர். o - - (திருக்குறள் விழா, செங்கோட்டை o o o l | 20.5.1967 米米米米米