பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

70

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 70 6 கவியரசர் முடியரசன்



உழவனெனப் பேர்சொல்லிச் சோம்பி நின்றே உழைப்பொன்றும் இல்லானாய் உறங்கி வாழ்ந்து பழகியவன் விதியினையும் துணையாக் கொண்டு பசிபோக்க ஒன்றுமிலேன் என்று துன்பில் முழுகுமவன் முகம்நோக்கி நிலமாம் நல்லாள் முணுமுணுத்து நகைக்கின்றாள்; உழைப்பை நல்கும் அழகனையே அவள்விரும்பி நாளும் நாளும் அழகெல்லாம் விரிக்கின்றாள் சிரிக்கின்றாளே.

தொழுதுண்டு பின்செல்லும் மாந்தர் தம்மைச் சுமக்கின்ற உலகமெனும் பெருந்தேர் செல்ல உழுதுண்டு வாழ்பவனே ஆணியாக உதவுகின்றான் எனப்புலவன் உரைத்த பின்னே எழுதுண்ட கோலாலே எழுதிக் காட்ட என்னுளது? பெருமைமிக வுடையா னேனும் அழுதுண்டு வாழ்கின்றான் உலகைக் காக்க அமுதுதரும் அவ்வுழவன்;முறையோ எது?

                                                           செய்யாறு, ) 
                                                           17ーIーI969
    • ** ** ** ** ** - - - 웃울 - -