பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக்குத் தலைவன்

உள்ளம் நினைத்ததை ஒரா தியற்றும் பள்ளிப் பருவம், பதினாறகவை; எண்ணக் குதிரையில் ஏறித் திரிந்து மண்ணில் விண்ணின் மகிழ்ச்சியைக் கண்டு பண்ணும் கத்தும் துகரும் பருவம்; தவறுகள் செய்தும் தருக்குடன் அலைந்தும் கவலையே யின்றிக் களிப்புறுங் காலம்; இளமைத் துடிப்பில் இதுதான் வாழ்வென உளமதிற் கருதி ஒழுகினேன்;அந்நாள் ஒதும் பொழுதில் ஒருநூலதனுள் திதிலா ஒருவரி தெரிதரக் கண்டேன்; ஒளிநிறை வடிவினன் ஒருவன் ஆங்கே தெளிமுகங் காட்டிச் சிரித்தனன் நோக்கி 'இளையோய் உலகில் இயற்றுக அறம் என அளிமிகு மொழியால் அறைந்தனன் என்பால்; அறஞ்செய் பருவமும் அவ்வறம் இயற்றிட உறுபொருட் பெருக்கமும் உற்றே னல்லேன் எவ்வணம் நல்லறம் இயற்றிட வல்லேன்? செவ்விதின் உரைஎனச் செப்பினன் மறுமொழி: 'மனத்துக் கண்ணுறும் மாசுகள் அகற்றின் அனைத்தறன்.இதனை ஆக்குக என்றனன், இனியநல் நெறியதாம் எளியநல் முறையதாம் இனிஅது செய்வேன் எனநான் முயன்றேன் அன்றே என்மன மாசுகள் அகன்றன நன்றே மொழிந்த நாவலன் வாழிய!