பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

74

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 74 6 கவியரசர் முடியரசன் -- -- ஒன்றுநன் றொருவர் உனக்குச் செய்ததை என்றும் நினைத்திரு துனை உயர்த்தும்; காக்கும் பொருள்பல காவா விடினும் நாக்கினைக் காக்க நாளும் தவறேல்; மறந்துங் கேடு மற்றவர் தமக்குப் புரிந்திட நினையேல் போற்றுக நன்மை: எனப்பல நெறிகள் இனிதே உணர்த்தி மனத்துட் பண்புகள் விளைத்தனன்; அவனே இனிய வாழ்க்கைக் கேற்றதோர் தலைவன் எனநான் கொண்டுளேன்; இப்புவி வாழ்வோர் அனைவர் தமக்கும் அவனே தலைவன் பொருளும் புகழும் போற்றாத் தலைவன் அருளும் அறமும் கருதிய தலைவன்; தேர்தலில் நில்லா நேரிய தலைவன்; ஆர்நிகர் உள்ளார் அவற்கெனுந் தலைவன் போட்டியிங் கில்லாப் புகலருந் தலைவன் பாட்டால் பண்பை ஊட்டிய தலைவன் மக்கள் நலமே மதித்திடுந் தலைவன் மிக்குயர் அறிவால் மேம்படுந் தலைவன் வாழிய தலைவன் வாழிய நலமே வாழிய குறள்நூல் வாழிய இனிதே.

                                                        31.5.1969.
                   米米米米。米