பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

76

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 76 கவியரசர் முடியரசன்

முப்பாலைத்தொட்டு முடிக்காது விட்டிருப்பான், எப்பாலோ சென்றவனும் ஏங்கிப் புலம்பிடுவான்; வஞ்சனையே வையத்தில் வாழும் நிலைகண்டு நெஞ்சு கொதித்து நினைந்து நினைந்தழுவான்; மக்கள் நிலைமாறி மாக்கள் நிலைக்கேகித் தொக்கிருக்கக் கண்டு துடிதுடித் தேவிழுவான்; சொல்லும் உயர்திணையைச் சூழுலகிற் காணாது வல்லதோர் அஃறிணையாய் வாழ்வாரைக் கண்டழுவான்; கற்றறிவு காட்டுவதில் முற்றாக நில்லாது சொற்றதோர் எச்சமெனச் சூழ்வாரைக் கண்டழுவான்; எச்சங்கள் நற்பெயரை ஏற்க முடியாமல் அச்சங்கொள் தீவினைக்கே ஆளாகக் காண்பான்; இலக்கணத்தார் வேற்றுமை எட்டென்பர் இங்கோ செலத்தொலைய வேற்றுமைசூழ்ந்திருக்கக்கண்டிடுவான்; பண்பு தொகை தொகையாய்ப் பாரில் பரவாமல் பண்புத் தொகையான பாழ்நிலையைக் கண்டிடுவான்; உண்மை அறம் நேர்மை உலகத்தில் தேடுங்கால் அன்மொழியாய்ப் போனதுகண் டாற்றாதழுதிடுவான்; நாற்பா வகைஎல்லாம் நன்குணர்ந்த பாவலர்தம் நுாற்பாக்கள் கண்டுவக்க நுண்ணறிவன் இன்றுவரின் வெண்பா எனும்பெயரால் விட்டுவைத்த நூாலெடுத்து *வெண்பாட்டுக் கண்டுளத்தில் வேதனைகள் கொண்டிடுவான் நல்ல அகவல்நூல் நாடி வருங்காலை அல்லல் மிகுந்தோர் அகவலன்றி வேறறியான்;

"உயர்திணை,அஃறிணை,முற்று,எச்சம்,வேற்றுமை.பண்புத்தொகை. அன்மொழி, வெண்பாட்டு முதலிய இலக்கச் சொற்கள் நயம்படக் கூறப்பட்டுள்ளன.