பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

87

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 9 87 ைகவியரசர் முடியரசன் - பித்தர் எனுமாறு பேதுற் றலைகின்றோம்; பேரருள் காட்டும் பெரியன் சினனென்போம் சிறுஞ் சினத்தைச் சிறிதேனும் விட்டோமா? அல்லா எனஒன்றும் அப்படியே சொல்லிடுவோம் அல்லா நெறிருடந்தே அல்லற் படுகின்றோம்; ஏசு பெருமான் எனவுரைப்போம் மற்றவரை ஏசு நெறியன்றி என்னபயன் கண்டுவிட்டோம்? ஏமாற்ற என்றே இறைநெறியைச் சொல்வதன்றி ஒர்மாற்ற மின்றில்லை உள்ளத்தை மாற்றிவிட்டோம்; நாமிழைக்குந் தீவினையால் நல்லதோர் செம்பொருள்மேல் *தோமிழைக்க ஐயங்கள் தோன்றிவரக் காண்கின்றோம் இன்றுவரும் மாணாக்கர் ஆசான் இயம்புவதைக் கொன்றுவருங் காலமிது கொன்றோம் அவன்மொழியை, முப்பாலாய் நல்ல முறைசொல்லும் நூலிருந்தும் அப்பாலைக் காணாமல் அப்பாலே செல்கின்றோம்; தாய்ப்பாலை நம்பாமல் மேய்ப்பானை நம்பிநின் றாப்பாலுக்காக அலைகின்றோம் நாம்பெற்ற ஐம்பொறியுங் கேடுறலால் அந்தோஇம் மாநிலத்தில் *செந்நெறியுங் காணாமல் சென்னெறியுந் தோன்றாமல் வாடி அலைகின்றோம் வாழ்வு கெடுகின்றோம் தேடி மயங்கித் திசைதெரியா தேங்குகிறோம்; சென்றதெலாஞ் செல்க திருமறையைத் தேர்ந்தினிமேல் நன்றுவழி சென்றுய்வோம் நாம். தருமபுரம் திருமடம் 9.6.1971 தோம் இழைக்க-குற்றம்செய்ய,செந்நெறி-செம்மையானவழி சென்னெறி-செல்+நெறி-செல்லும் வழி.