பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடும் அரசும் இ. நோயில்லாமை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் என்ற ஐந்தும் நாட்டிற்கு நல்லணிகள் என்று சொல்லு: வார், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று தம் முன்னுேக் கொண்டாடுவர். மக்கள் வாழ்விற்கு இன்றியமைவாத செல்வம் பல்வகையாலும் வந்து குவிதல்வேண்டும். ஒன்று, நூருக விளக்கும் உயர்ந்த திலவளம் அமையவேண்டும். ஆன்ருேர் வாழ்வும், அருள் பெருக்கும் விழவும் இடையருது நிகழ்ந்து மக்கட்கு இன்ப மூட்டுதல், நாட்டிற்கு மிக்க அழகே நல்குவதாகும். ஆற்றல் சான்ற அரசகுலும் அவன்பால் பேரன்பு பூண்ட தன் மக்களாலும் வலியமைந்த அரசூலும் உனதாகும் அரிய காவல் மற்றுமோர் அணியாக மதிக்கப்படுகின்றது. "பிணியின்மை செல்வம் வினவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். ஒரு நாட்டில் தக்கார் சிலர் வாழ்தல் மிக்க பெரு மையை அந்நாட்டிற்குத் தருவதாகும். நிலத்தின் நலத்தை உணர்த்த வந்த தமிழ் மூதாட்டியார், அத் திலம் ஒருபால் நல்ல நாடாகவும் இருக்கலாம் : ஒருபால் காடாகவும் கிடக்கலாம் ; ஒருபால் மேடாகவும் அமைய லாம் ; ஒருபால் வெறும்பள்ளமாகவும் காணலாம் : அஃது எவ்வாறு அமைவினும் குறைவில்லே எவ்விடத்தே ஆண் மக்கள் அருங்குணம் படைத்த நல்லாசக உள்ளாசோ அவ்விடமே நலமுடைய நாடு நன்கு அமைகின்றது" என்று அறவுரை வழங்கி யருளினர். 'நாடா கொன்ருே கனடா கொன்ருே அலகை கொன்குே மிசையா கொன்ருே