பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 $3. வள்ளுவர் சொல்லமுதம் துண்ணிய நூல் பல கற்றவராயினும் அவைக்கு அஞ்சும் அறிவுடையார் பலர். அவர்கள் பெற்ற நூலறி வால் சிறிதும் பயனில்லை. நெஞ்சில் உரமில்லாத ஒருவன் வாளேத்தி பாது பயன் ? அவன் கையிற் பிடித்த வாள் எத்துனேக் கூர்மையுடையதாய் இருந்தாலும் அதஞல் விளைவது ஒன்றுமில்லே. அதைப் போன்றே ஒருவன் மிகச் சிறந்த நூல்களே மிகவும் நுட்பமாகப் பயின்றிருந் தாலும் அவைக்கு அஞ்சுவானுயின் அவனது நுண்ணறிவு பீதர்க்கும் தனக்கும் பயன்படாதொழியும். இதனை மக்க ளுடைய தீர்ப்புக்கு விடும் திருவள்ளுவருடைய பொருண் மொழி உவமை நலம் கனிந்த உயர்ந்த விளுவாகத் திகழ், கின்றது. வானொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலெரடிென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு" என்பது அவர் சொல்லமுதமாகும். அவைக்கஞ்சும் அறிஞனது இழிவை மற்றுமோர் உவமையால் வள்ளுவர் விளக்கியருளிஞர். பெண் னியல்பு மிக்கு ஆணியல்பும் உடைய பேடி கூரிய வாளைப் பிடிப்பதில் பயனில்லேயன்ருே வீரர் நிறைந்த சிறந்த போர்க்களத்தே பேராண்மை மிக்க வீரன் பிடித்த கூரிய வானே சீரிய பயனை விளக்கும். பேடி பிடித்த வாள் தனது பெருமை இழக்கும். அஃதேபோல் கற்ருர் கூடிய அவையும் வாய்த்துச் சொல்லப்பெறும் நூலும் சிறந்த தாக அமைந்தாலும் அதனேச சொல்லப் புகுத்த கலே வல்லான் அவைக்கு அஞ்சுபவளுயின் அவனது அறிவும் அந் நூலும் சிறப்பை இழப்பனவாகும் என்று உரைப்பாச் திருவள்ளுவர்.