பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ள்ைளுவச் சோல்லமுதக் மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்து விளங்கிய அவனது திருமுகம் அவளது அகக்கண் முன்னர்த் தோன்றியது. அதனை நினைத்து அகமுருகிளுள் சீதை. அவனது உண். நிலையை விளக்கும் கம்பரது பாடல் கற்பவர்க்கு இன்ப மூட்டுவதாகும். மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும் இத்தி ருத்துறத் தேகென்ற போதிலும் சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை ஒத்தி ஆக்கும் முகத்தினை உன்னுாைள்.' இங்ங்னம் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று போல் கருதி அனுபவிக்கும் உள்ளம் எல்லோர்க்கும் எளிதில் வாய்ப்பதன்று. யான், எனது என்னும் இரு வகைப் பற்றுகளே விட்டொழித்தார்க்கே அத்தகைய, உள்ளம் அமைவதாகும். இப் பற்றுகனே துன்பத்திற்குக் காரணமாவன. ஆதலின் அவற்தைத் துன்பத்துள் துன்பம் என்று குறித்தார் திருவள்ளுவர். அத்தகைய அவாக் கெடுமாயின் இருமையினும் இன்பம் பெருகும். 'இன்பம் இடையது ஈண்டும் அலாவென்னும் துன்பத்துன் துன்பம் கெடின்' என்பது வள்ளுவர் சொல்லமு இம்.