பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வமும் கல்குரவுக் இ? தமைய வெறுக்கை' என்ற பெயரைப் பொருத்தமாகக் கொடுத்தனர் புலவர் என்று போற்றிஞர் மகாவித்துவான் பிள்னையவர்கள். 'பெருவறு பந்த மெல்லாம் புணர்த்திடும் தெய்வ சிந்தை ஒருவமே லிட்டு நிற்கும் உறக்கமும் இறக்கச் செய்யும் கருவினுட் ஆகுத்தும் இன்ன கரிசுகண் புதனு ன்ைருே இருநிலத் திடிைவே றக்கை என்னுைர் புலமைச் சான்குேச்' என்பது அவரது இனிய பாடலாகும். நல்வினை தீவினை இரண்டற்கும் காரணமாகிய செல்வத்தைப் பெற்றவர் அறிவின் துணைக்கொண்டு அதன் பயனைப் பெறுதற்கு முயலவேண்டும். செல் வத்துப் பயனே ஈதல் என்பார் நக்கீரர். "தானாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்பார் வள்ளுவர். தாமும் துய்க்காது தக்கார்க்கும் வழங்காது புதைத்து வைக்கும் புன்மையுடையார் செல்வம், பருவமும் உருவமும் பெற்றும் மணம் பெருத கன்னியர்க்கு ஒப்பாகும் என்று உரைத்தது நாலடிப் பாடல், கணவனைப் பெருது கன்னியராகவே வாழும் காரிகையர் பேரழகினராய் இருந்து மாது பயன்? தாமும் இன்புருது, தக்க மணுளர்க்கும் இன்பந் தராது, தமது பேரழகைப் பாழ்படுத்திப் பயனின்றி அழிவர். அது போலவே உலோபியின் பெருஞ்செல்வம் அழித் தொழிவதாகும்.