பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வள்ளுவர் சொல்லமுதல் 'கொடுத்தலும் துய்த்தலும் தேற்ரு இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம்-இல்லத்து) உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும்’ என்று சமணமுனிவர் சாபமொழி பகர்ந்தார். உலோபிகள் பெற்ற செல்வம் தாய் பெற்ற தெங்கம் பழத்திற்கு ஒப்பாகும் என்ருர் பழமொழியாசிரியர். கழு தைக்குக் கரும்பின் சுவை தெரிவதில்லை. உலோபியோ செல்வத்தின் பயனே உணர்வதில்லே, தேங்காயைப்பெற்ற நாய் அதனைப் பாங்காய் உடைத்துண்ணும் பக்குவத்தை அறியுமா ? மற்றவர்க்குத்தான் அதனைக் கொடுக்குமா ? அந்நாயை அடித்துப் பறித்துச் செல்வார்க்கே அத் தேங்காய் பயன்படுவதாகும். ஆகவே, பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ்செல்வம், வேறு பிறர்க்கு உதவி ஆக்கு பவர் பேருக மாறும் என்று கூறுவார் சிவப்பிரகாசர். இக் கருத்துகளே எல்லாம் சுருக்கமாகச் இசால்ல வந்த வள குவா, அத்ருர்க்கேசன்(று) ஆற்ருதான் செல்வம் மிகதலம் பெற்ருள் தவியள் மூத் தற்று: என்று கூறியருளினர். உலோபியின் செல்வம் வீணேயழிதல், பெண்களுள்ளே பேரழகைப் பெற்ருள் ஒருத்தி, கொடுப்பார் இன்மையால் கொழுநனப்பெருமல் தனித்துக் கன்னியாகவே வாழ்ந்து தனது நலத்தைக் கெடுத்து மூத்த தன்மைக்கு ஒப்பாகும் என்று உரைத்தார் திருவள்ளுவர். மேலும், ஊர் நடுவே நச்சுமரம் பழுத்து திற்பதற்கு ஒப்பாகும் என்றும் குறித்தார். பேரறிவாளர் பெற்ற பெருஞ்செல்வமும், தயனுடை யார் பெற்ற நற்செல்வமும், பெருந்தகையுடையார் பெற்ற