பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வமுக் கல்குரவும் 6#” ஒருவனது உள்ளத்தில் பொருமை எழுமாயின் அதளுல் பல பாவங்களேச் செய்யத் துணிவான். ஆதலின் அப் பொருமையினைப் பாவி என்றே குறித்தார் வள்ளுவர். 'அழுக்காறு என ஒரு பாவி என்பது அவர் வாய்மொழி. இதைப் போலவே வறுமைவுக் பெரும்பாவங்களைச் செய்க; மாறு தூண்டும் பெற்றியுடையது. ஆதலின் இவ் வறுமை யையும் வள்ளுவர் இன்மை என ஒரு பாவி’ என்று குறித் தருளிஞர். இருமை இன்பத்தையும் இழக்குமாறு செய்து மீளாத இருளுலகத்தில் வீழுமாறு செய்யும் வெம்மை வாய்ந்தது வறுமையாகும். தொன்றுதொட்டு வரும் குடிப்பெருமை யெல்லாம் குலேவுமாறு செய்யும். தேன் பழித்தற்குக் காரணமாய சோர்வைப் பெருக்கும். வறுமைத் துன்பம் காரணமாகப் பல்வேறு துன்பங்கள் தாமே வந்து விளையும். வறிஞன் சிறந்த அறிஞளுக நுண்ணிக நூற்பொருனே எண்ணி அறிந்து சொன்ஞலும் எவரும் கேளார். இவன் சொல்லும் இனிய பொருளை விரும்பிக் கேட்போமாவின் இவன்பால் அன்பு காட்ட வேண்டும் இவனது குறை:ை முடிக்கவேண்டும் என்று அஞ்சிக் கேளாது அகல்வர். ஆதலின் வறிஞனது சொற்கள் பயனற்றனவாய்ப் போகும். இக் கருத்தை வலியுறுத்த வந்த குமரகுருபரர் தக்கதோர் எடுத்துக் காட்டுடன் விணக்கியருளிசூர் இல் லறத்தை ஏற்ற ஆண்மகன் நல்லறத்தை நாடிச் செய் வினும் அவனுக்கு வாய்த்த மனைவி மனத்தக்க மாண்பில் ளாவின் அவன் ஆற்றும் அறங்கள் போற்றப்படா. அஃதே போல் வறுமையுற்ருர் கற்ற கல்வி எத்துணைப். பெருமைவுற்றதாயினும் சிறிதும் சிறப்பெய்தாது என்று. குறிப்பிட்டார் குமரகுருபரர்.