பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றமும் சுற்றமும் 鬍蠶° இராமனது கடியவேகச் சுடுசரத்தால் உடல்முழுதும் துணைக்கப்பட்டு இறந்துகிடந்த இலங்கை வேந்தனின் மனேவியாகிய மண்டோதரி அவனது மார்பில் விழுந்து புரண்டு இங்ங்ணம் புலம்பிக் கதறினுள். வில்லில் வல்ல வீரணுகிய இராமனது வெங்கனை, இராவணனது உடம்பில் உயிர் இருக்கும் இடத்தைத் தேடித் தேடி இங்கனம் துளைத்ததோ? அல்லது சீதை என்னும் தல்லாளே உள்ளச் சிறையில் ஒளித்து வைத்த காதல், உடம்புள்ளே எங் கி மறைந்திருக்குமோ என்று ஊடுருவித் தடவித் தடவித் தேடியதோ ? என்று மண்டோதரி புலம்புமாறு இலங்கை வேத் தன் உடல் இராமனது அம்பு களால் சிதைந்து புண்பட்டுக் கிடந்தது. ஏமாங்கத நாட்டு மன்னனுகிய சச்சத்தன், விசயை என்னும் பெண்ணனங்கை விரும்பி மனந்தான். அவனது பேரழகில் ஈடுபட்ட அரசன் இடையருது அவளுடன் அந்தப்புரத்தில் தங்கி இன்புற ஆசை கொண்டான். அமைச்சனகிய கட்டியங்காரன் என்பானிடம் அரசினே ஒப்புவித்துக் காம நுகர்ச்சியில் காலத்தைப் போக்கத் தலப்பட்டான். இதுதான் தக்க சமயமெனக் கருதிய கட்டியங்காரன், அரசினைக் கைப்பற்றித் தானே வேத் தணுக முயன்ருன், விசயையின் அந்தப்புரத்தை முற்றுகை விட்டு வேந்தனைக் கொன் ருெழித்தான். அளவிதந்த காமநுகர்ச்சியின் காரணமாகச் சச்சந்தன் அரசினை இழந்து, ஆருயிர் துதந்தானன்ருே இவ் வரலாறு களால் வரம்பிகந்த காமம், அரசர்க்கும் பெருங்குற்ற மாகும் என்பது அறியப்படும். கோசிகள் என்னும் முனிவன் சினத்தையே தனது வடிவாகக் கொண்டவன். அவன் நீண்ட தாள் ஆற்றிய நெடுந்தவ ஆற்றலையெல்லாம், தான் கொள்ளும் அள