பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IOO டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன் ; பாபத்தைத் தீராத் தீர்த்தம் : பயனில்லை ஏழுந்தானே

(விவேக சிந்தாமணி)

என்பதால், பயனில்லா காரியம் பண்ண அங்கே இடமில்லை. குருவின் அரிய கட்டளை, உடலை வலிமை செய் என்பதுதான்.

இங்கே உடல் எப்படி வந்தது? வலிமை எப்படி வந்தது என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

பொருள் என்ற சொல்லுக்கு பொன் என்றும் , உடல் என்றும் அர்த்தம் உண்டு.

புகழ் என்ற சொல்லுக்கு அருஞ் செயலாற்றி பெறுகின்ற கீர்த்தி என்பது மட்டும் அர்த்தமல்ல. மேம்பாடு, மேன்மை, சீர், ஏற்றம், ஒளி, தேற்றம் , வாகை என்றெல்லாம் அர்த்தம் உண்டு.

- பொருள் சேர் புகழ் புரிந்தார் என்றால், உடலில் சேர்கின்ற மேன்மையான ஒரு காரியத்தைப் புரிந்தார். அதாவது மனிதர் (Manhood) என்றாலே, வலிமை என்றுதான் அர்த்தம். ஆமாம் , வலிமையான உடல்தான். வாழ்வில் பெறவேண்டிய அனைத்தையும் பெற வைக்கிறது. சேரவேண்டிய இடத்திற் கும் சென்று சேர வைக்கிறது.

நாம் இயல்பான ஒர் உதாரணத்தையும் இங்கே பாார்ப்போம்.

பானை ஒன்று இருக்கிறது. பானையில் தண்ணிர் நிறைய இருக்க வேண்டும் என்று விருப்பம். தண்ணிர்