பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IO6 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

சிந்திக்கின்ற மனம், நல்லவைகளை நினைத்துக் கொண்டிருக்கும்போது, தேகத்தில் ஏற்பட்டு நடந்து கொண்டிருக்கிற சுகம் தரும் சுவாச முறையானது. இயல்பாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சுவாசம் இயல்பாக ஒழுங்காக நடக் கிற போதெல்லாம், வாயுவின் பரிமாற்றம் , உயிர்க்காற்றுடன் உடல் முழுதும் வேகமாக ஒடுகிற இரத்த ஒட்டம், உள்ஸ்ரீப்புக்கள் தூய்மை பெற்று செழுமையாகவும் முழுமையாகவும் செயல் படும் ஊக்கம் எல்லாம் , தொடர்ந்து சிறப்புற நடந்து கொண்டேயிருக்கும்.

மனதிலே நல்லெண்ணங்கள் மாறி, தீய எண்ணங்களான கபடு, சூது, களங் கப்படுத்தும் யுக்திகள் என்று தோன்றிய உடனேயே, திக் கென்று ஒர் இதயத்துடிப்பு. திகைப்புடன் மாற்றம் பெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, சுவாசத்தில், ஒழுங்காக நடந்து வந்த இயக்கம் தடைபட்டு, மீண்டும் தொடர ஆரம்பிக்கின்றது. அந்த மாற்றத் தினால், நாம் முன்னே கூறிய அத்தனை உடற் பணிகளில் எல்லாம், தடுமாற்றம் ஏற்பட்டு, நடைமாற்றம் கொள்கின்றன.

தீய மனதினனாக, தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே செயல் படுபவனுக்கு, மன இறுக்கம், மன =9 (upg. 3; LB (Tension, stress and strain) grg; L L (5) விடுவதால், அவனது முகத்திலும் முக அழுத்தமும் இறுக்கமும் ஏற்பட்டு விடுகின்றன.

முகத்திலே சிறு சிறு, துண்டுத் துண்டுத் தசைகள், அரை அங்குலத்திற்கும் குறைந்த அளவுள்ளதாக 30 தசைத்துண்டுகள் இருக்கின்றன. இவற்றிற்கு சரியான