வள்ளுவர் வணங்கிய கடவுள் 125
நின்றார், வெற்றிகரமாக வேள்வி இயற்றுவது போன்ற வேட் கையுடன், வெற்றிகரமாக நின்றார் என்று கொள்ள வேண்டும்.
இதுவரையில், நாம் பொருள் கூறிவந்த பதங்களுக்குரிய தொகுப் பினை, இங்கே நாம் தொகுத்துக் காண்போம்.
ஐந்து பொறிகளான தீப் பொறிகளின் ஆரம்ப நிலையிலேயே, எரிந்து பரவ விடாமல், அவித்து அனைத்து, புறத்தால் வென்றது போல, அகத்திலும் இருள் அழித்து, ஒளி விளைத்து, ஒழுக்கமான உயர் வாழ் கி கையில் ஒழுகி, தினம் அந்த உயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகிற ஞானகுருவின், சீரிய வழியிலே செல்கின்ற சீடர்கள் எல்லோரும், புகழுடன், பெருமை யுடன் நீண்ட காலம் வாழ் வர்கள்.
இங்கே பொறிகளை தீப் பொறிகள் என்று
குறிப்பிட்டதற்கு, தீயின் தன்மையனவாக, பொறிகள் ஐந்தும் இருப்பதே காரணமாகும்.
எதைப் போட்டாலும், ஏற்றுக்கொண்டு எரிக்கும் இயல் புள்ளது தீயாகும். எரிக்கும் போது, தானும் எரிந்து கொண்டும் , எரித்து விடுவதும் அதன் இயல்பான குணமாகும்.
‘கள்ளப் புலன் என்னும் காட்டை வெட்டிக்
கனலிட்டு எரித்திட்டால், காணலாம் வீட்டை”
என்று கடு வெளிச் சித்தர் பாடுவதையும் இங்கே நினைவு கொள்வோம்.
‘அஞ்சு பஞ்ச பூதம் அறிந்தால் அநிதி யம்