பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 135

மனக் கவலை எவ்வளவு வல்லமையுள்ளது என்பதையும் நாம் இங்கே அறிந்து கொண்டாக வேண்டும்.

கவலை என்ற சொல்லுக்கு, அச்சம் , துன்பம், மனச் சஞ்சலம், பல நினைவு, விசாரம் என்றெல்லாம் பொருள்கள் நிறைய உண்டு.

நீச்சல் தெரியாதவர்கள், வெள்ளத்திற்குள் விழுந்து விட் டால் , வெளியே வர முடியாமல், நிற்கவும் முடியாமல் , தவித்து, தத்தளித்துப் போய் மூச்சு முட் டித் திணறுவதைப் போலவே, கவலை கொண்டவர்களும் அப் படித் தன் ஆடிப் போய் விடுகின்றார்கள். மனதை ஆட்டிப்படைத்து, அழுத்தி வளைத்து, கீழாக இழுத்துத் தொலைத்து, பலத்தை யெல் லாம் , அழித்துப் போடும் , பயங்கரத்தைத் தான் கவலை என்றுகூறுகின்றார்கள்.

கவலை என்ற சொல்லே, எப்படி பிறந்திருக்கிறது பாருங்கள்.

க+ வலை என்று இந்தச் சொல் லை, இந்தக் கல்லைப் பிளந்து பார்க்கிறோம்.

வலை என்றால் பிடிக்கும் கருவி, கண்ணி என்று

பொருள். எதையும் இழுத்துப் போடுவது, வளைத்துப் போடுவது என்பதற்கும் வலை என்று தான் பெயர்.

இது எப்படிப்பட்ட வலை என்றால் க என்கிற

]   .

அந்த க என்ற சொல்லுக்கு, அத்தனை அழுத்தம் எதற்கு என்றால் , அதுதான் அந்த வலையை பயங்கரமாக மாற்றும் பெரும் சக்தியாக இருக்கிறது.