பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2u6i Spoj Suswomirtu 35L6ljer 39

பிரம் மனிடம் செய்த பாவம் விஷ்ணுவிடமும்; விஷ்ணுவிடம் செய்த பாவம் சிவனிடமும் ; சிவனிடம் செய்த பாவம் குருவின் இடத்திலும்; அழிந்துவிடும். ஆனால் குருவிடம் செய்த பாவம் அழியாது நிற்கும்.

இதுவே குருவின் மாண்பாகும். இதனால் தான் குரு துரோகம் பொல்லாதது என்று கூறுகின்றார்கள்.

ஆகவே, குரு என்பவர் கண்முன்னே வாழ்கிறவர். மனிதர்களைப் போலவே வாழ் கிறவர். தன்னை நம் பிப் பின் தொடர்கிற மாணவனை, அதாவது சாதகனை நல்வழிப்படுத்துகிறவர். தான் வாழுகிற வாழ்க்கையில் நம்பிக்கையை ஊட்டுகிறவர். நல்ல நெஞ்சகமாக மாற்றி பக்திப் படுத்துகிறவர். ஆமாம், அவர் அவனைத் தெய்வ நிலைக் குக் கொண்டு வருகிறவர்.

முன்னேற முடியாத ஒருவனை, முன்னேறத் துக் கி விடுகிறவர். அதிமேனி மை மிக்க ஞானத்தை, அவனுக்குக் கற்பித்து, முடிவற்ற மெய்யுணர்வையும் அழிவற்ற பேரானந்தத்தையும், தருகிறவர்.

ஆனந்தம் என்பது ஆன்+நந்தம் என்று பிரிகிறது. நந்தம் என்றால் பெருக்கம். ஆன் என்றால் ஆன்மா வின் இன்பம் என்பதாகும்.

ஆன்மாவின் இன்பப் பெருக்கமே, ஆனந்தம். இங்கே பேரின்பத்தை அல்லவா பெருக்கிவிடுகிறார். குரு அவர்கள்.

குரு என்பவர் சுடர் விளக்கு போன்றவர். ஒரு சுடர் விளக்கிலிருந்து ஒளி ஏற்றப் பெற்று ஒளி தொடர் வதுபோல, குருவிலிருந்து ஞானத்தைக் கற்றுக்