பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

4. எல்லாம் வல்ல பகவன்

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற் றே உலகு” - (1)

Tென்பது கடவுள் வாழ்த் தில் உள்ள முதல் பாடல். பூவுலகத்தைப் புதுப் பிக்க வந்த, புரட்சிக் குறட்பாக் களின் முதல் பாடல் என்றே கூறலாம்.

இந்தக் குறளுக்கு, உரை விரித்த பரிமேலழகரை, ‘பன்னு தமிழ்த் தேர் பரிமேலழகன்’ என்று பாயிரம் வாழ்த்தும். இந்நூலுக்குப் பதித்த உரை யெல்லாம், பரிமேலழகன் தெரித்த உரையாமோ என்று மேலும் சிறப்பித்துப் பேசுவார்கள்.

இந்தக் குறளடிக்கு அவர் தந்த விளக்கத்தை அப்படியே தந்திருக்கிறேன்.

எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை

உடையன. அது போல உலகம் ஆதிபகவனாகிய முதலை உடைத்து.